Wednesday 22 June 2011

கனவின் கல்லறைக்குள் நான்.




உன்னருகில் நிற்கும் போதெல்லாம்
இடம் மாறத்துடிக்கும் இதயம்
உன் மலராத விழிகள் கண்டு
இடிந்தேதான் போகிறது....
பழகிய காலங்கள் எல்லாம்
பார்வையில் மேய்ந்து செல்கின்றன...

அந்தி முடிந்த நேரம் - உன்
அரவணைப்பினில் மீளவிரும்பாமல்
உனக்கான காதலை தாங்கியபடியே
தவமிருக்கின்றேன்...!
கனவின் கல்லறைக்குள் நான்...!!


துக்கத்தை துரத்தாமல்
போராடும் நான்
கனவில் காதலன் கைபட்டவுடன்
மல்லிக் கொடியாய்
மணம் வீசுகிறேன்.....!!

என் இதய தீபத்தை
தெளிவாய் ஏற்றிவைத்தேன்
அதுவோ
தீக்கனலாய் சுட்டு எரிக்கின்றது...
என் காதலின் கண்ணீரில்
கடல் மட்டமும் உயர்கின்றது...


நாள் பட்ட உணவை விடுவதுபோல்
நாள் பட்ட உன் நினைவை விடுவதில்லை..
உள்ளக்காயத்தில் உதிரம் உதிர்ந்தாலும்
நகன்று சென்ற உன் நினைவுகள்
நன்னெறியாய் மருந்தளிக்கும்......

எத்தனை முறை எனை
நீ தவிர்த்து சென்றாலும்
முறித்துப் போட்ட முருங்கை
நிமிர்த்தி வைத்தால் தளிர்வதுபோல்
உன் பார்வையின் பலத்தில்
நானும் தளிர்ந்து உன்னைச் சரணடைவேன்...

3 comments:

  1. //முறித்துப் போட்ட முருங்கை
    நிமிர்த்தி வைத்தால் தளிர்வதுபோல்
    உன் பார்வையின் பலத்தில்
    நானும் தளிர்ந்து உன்னைச் சரணடைவேன்...//

    அருமையான உவமை.

    ReplyDelete
  2. என் காதலின் கண்ணீரில்
    கடல் மட்டமும் உயர்கின்றது...

    அருமையான வரிகள்.
    அழகு கவிதை.
    மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. வார்த்தைகளின் வழியே வழிகிறது உணர்வுகள் அருமை ...........

    ReplyDelete